‘பணி’ படத்திற்காக 2 வருடங்கள் நடிக்கவில்லை: ஜோஜு ஜார்ஜ்
பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதன் முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘பணி’. திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது தமிழில் நாளை வெளியாகிறது. இப்படத்தை தமிழகமெங்கும் ஶ்ரீ கோகுலம் மூவிஸ் வெளியிடுகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி, தமிழில் பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஜோஜு ஜார்ஜ் பேசியதாவது:
இந்த படத்தை அப்பு பத்து பாப்பு புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர்கள் ரியாஸ் ஆடம், சிஜோ வடக்கன் தயாரித்துள்ளனர். ஜோஜு ஜார்ஜ், சாகர் சூர்யா, ஜுனைஸ் வி.பி., பாபி குரியன், அபிநயா, அபயா ஹிரண்மயி, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், பிரசாந்த் அலெலீசாண்டர், சுஜித் சங்கர், ரினோஷ் ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் விஷ்ணு விஜய், சாம் சி. எஸ் இசையமைத்துள்ளனர்.