விஜய்சேதுபதியின் 50வது படம் என்பதால் பொறுப்புடன் உருவாக்கி உள்ளேன்: மகாராஜா இயக்குனர் பேட்டி

‘மெரி கிறிஸ்துமஸ்க் படத்திற்கு பிறகு வெளிவரும் விஜய் சேதுபதி படம் ‘மகாராஜாக். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும்.

இதில் விஜய்சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் மற்றும் நடராஜ் சுப்ரமணியம் ஆகியோரும் நடித்துள்ளனர். அஜனேஷ் லோக்நாத்தின் இசை அமைத்துள்ளார், தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் கூறியதாவது: கடந்த 14 வருடங்களாக என் மனதில் இருந்த கதை இது. 14 முறை இந்த கதையை திருத்தி திருத்தி செப்பனிட்டிருக்கிறேன். இந்த படம் ஆரம்பிக்கும்போது இது விஜய்சேதுபதியின் 50வது படமாக தொடங்கவில்லை. அது எதேச்சையாக அமைந்தது. இதனால் படத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது வந்தது.

படத்தின் டிரைய்லரில் விஜய் சேதுபதி தேடும் லட்சுமி யார் என்பதை தொடர்ந்து ரகசியமாக வைத்திருப்போம். படம் வெளிவரும்போது அது தெரியவரும், படத்தில் பாரதிராஜாவும், அனுராக் காஷ்யப்பும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். இருவருமே எனக்கு பிடித்த நடிகர்கள் என்பதால் அவர்களை இந்த படத்திற்குள் கொண்டு வந்திருக்கிறேன். படப்பிடிப்பு காலங்களில் இவர்கள் இருவரிடமும் நிறைய கற்றுக் கொண்டேன்.

மஹாராஜா யார் என்றால் யாரெல்லாம் விஜய்சேதுபதியின் குணத்தை கொண்டவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் எல்லாருமே மஹாராஜாக்கள்தான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதுதான் படம் சொல்லும் செய்தி. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.